சிறந்த நடிகை விருது வாங்குவதுதான் நடிகை சித்ராவின் ஆசையாக இருந்தது

சிறந்த நடிகை விருது வாங்க வேண்டும் என்பதுதான் சின்னத்திரை நடிகை சித்ராவின் ஆசையாக இருந்தது என்று கூறி சக நடிகர், நடிகைகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி சீரியல் அனைவரும் விரும்பவராக நடித்த சித்ரா ஓட்டல் அறையில் உள்ள மின் விசிறி ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை உலகத்தையே உலுக்கிவிட்டது.

அவர் தற்கொலை செய்யுமளவுக்கு கோழை அல்ல, மிகவும் தைரியமானவர் என அவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கூறிவருகின்றனர். எனவே, ஹோட்டல் அறையில் சித்ராவுடன் தங்கியிருந்த அவரின் வருங்கால கணவர் ஹேமந்த் மீது சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் விசாரணையும் நடந்து வருகிறது.

இந்நிலையில், அவரை பற்றி அவருடன் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் பல தகவல்களை தெரிவித்து வருகின்றனர். சித்ராவா இதை செய்தார் என்றால் நம்பமுடியவில்லை. மிகவும் தைரியமானவர். தன்னம்பிக்கை உள்ளவர். எப்போதும் கலகலப்பாக இருப்பார்.

எல்லோருடனும் உற்சாகமாக பேசுவார். குழந்தை மாதிரி துருதுருவென இருப்பார். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. விஜய் தொலைக்காட்சி சீரியலில் சிறந்த நடிகை விருது வாங்க வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர்தான். ஆனால், அதற்குள் இப்படி நடந்துவிட்டது' என அவர்கள் கூறுகின்றனர்.