நானும் விரைவில் மாலத்தீவு செல்ல போகிறேன் - நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலர் தற்போது மாலத்தீவில் சுற்றுலாவில் உள்ள நிலையில் நானும் விரைவில் மாலத்தீவு செல்ல போகிறேன் என நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றுள்ளார். மேலும் தமிழ் நடிகைகள் நடிகை பிரணிதா சுபாஷ், நடிகை வேதிகா ஆகியோர்களும் தற்போது மாலத்தீவில் தான் ஓய்வு எடுத்து வருகின்றனர். இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் அழகழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் லாக்டவுனுக்குமுன் கணவருடன் திருமண நாளை கொண்டாட மாலத்தீவு சென்றதை மலரும் நினைவுகளாக நடிகை குஷ்பு புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். திட்டமிடப்படாத அந்த பயண நாட்களை நான் மிகவும் ரசித்தேன் என்றும் லாக்டவுனுக்கு முன்பாக நாங்கள் மாலத்தீவு சென்றது இன்னும் மறக்க முடியாத பயணம் என்றும் கூறியுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி தனது திருமணநாள் வருவதை அடுத்து மீண்டும் மாலத்தீவுக்கு செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.

மேலும் கடந்தமுறை மாலத்தீவுக்கு சென்றபோது கணவருடன் எடுத்த ரொமான்ஸ் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ்கள் கமெண்ட்கள் குவிந்து வருகிறது.