வெற்றி விழாவில் பங்கேற்காத நயன்தாரா... ரசிகர்கள் உச்சபட்ச கோபம்

சென்னை: ஜவான் படத்தின் வெற்றி விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்காததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

கிங் கான், பாலிவுட் பாட்ஷா என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

நடிகை நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாகவே எந்த ஒரு படத்தின் ப்ரோமோஷன் விழாவிலும் கலந்து கொள்வதில்லை. ஆனால், கண்டிப்பாக சென்னையில் பிரமாண்டமாக நடந்த ஜவான் படத்தின் ப்ரோமோஷன் விழாவில் நயன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதற்கும் நயன்தாரா வரவில்லை. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் வேதனையடைந்தனர். மேலும் படம் வெற்றியடைந்து வெற்றிவிழாவும் நடைபெற்றுள்ளது. இதில் நயன்தாராவை தவிர்த்து மற்ற அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். வெற்றி விழா நிகழ்ச்சியிலும் நயன் கலந்து கொள்ளாததால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

தன்னுடைய கணவர் தயாரிப்பில் உருவாகும் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் மட்டுமே கலந்துகொள்ளும் நயன்தாரா, மற்ற தயாரிப்பாளர்களின் பணத்தில் உருவாகும் படங்களின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொள்ளாதது ஏன் என கேட்டு வருகிறார்கள்.

நயன்தாராவின் அம்மாவிற்கு இன்று பிறந்தநாள் என்று தான் அவர் கலந்துகொள்ளவில்லை என்று மேடையில் ஷாருக்கான் கூறி இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.