நடிகை நயன்தாராவின் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்

நடிகை நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்கள் மீது மக்கள் பார்வை அதிகம் திரும்பியது. நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் கீர்த்தி சுரேஷின் பென்குயின் உள்ளிட்ட படங்கள் நேரடியாக இணைய தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வந்தது.

நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சூர்யாவின் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இவ்வளவு மாஸ் உடைய ஹீரோ படமே இணையதளத்தில் வெளியாகும் பொழுது அதைப் பார்த்து பல ஹீரோ, ஹீரோயின்கள் அவர்கள் படத்தை இணையதளத்தில் வெளியிடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் மூக்குத்தி அம்மன் அந்தப் படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே முழுமையாக முடிந்து விட்டது அதுபோக இந்த படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தை தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கணேஷ் விரைவில் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார். தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் அதில் நிறைய சிக்கல்கள் இருப்பதால் மூக்குத்தி அம்மன் படத்தை இணையதளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஒரு பெரிய ஓடிடி நிறுவனத்துடன் தயாரிப்பாளர் தரப்பும் ஆர்ஜே பாலாஜியும் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் இதுகுறித்து அதிகாரபூர்வமான தகவல் படக்குழுவினர் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.