ஆக்சன் கதையில் சிபிஐ அதிகாரியாக களம் இறங்கும் நடிகை பிரியாமணி

சென்னை : ஆக்சன் கதையில் அட்டகாசம் பண்ண ரெடியாகி விட்டார் நடிகை பிரியாமணி என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


பருத்தி வீரன் படத்துக்காக தேசிய விருது பெற்ற பிரியாமணி, திருமணத்துக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘டாக்டர் 56’. இதில் பிரியாமணி சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார். இந்தப் படத்துக்காக தன்னை ஒரு ஆக்‌ஷன் கேரக்டராக மாற்றியிருக்கிறார்.