ட்விட்டர் கணக்கை நீக்கினார் நடிகை ராஷி கண்ணா

சென்னை: நடிகை ராஷி கண்ணா தனது ட்விட்டர் கணக்கை நீக்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்கமறு, சங்கத்தமிழன், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம் உட்பட படங்களில் நடித்தவர் நடிகை ராஷி கண்ணா. தற்போது கார்த்தியுடன் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு தென்னிந்திய சினிமாவில் நடிகைகளை மோசமாக காட்டுவதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் ராஷி கண்ணா.
இதனால் ட்விட்டரில் கடுமையான ட்ரோல்களை சந்தித்தார். இதற்கிடையே தற்போது தனது ட்விட்டர் அக்கவுண்டை நீக்கியுள்ளார். விமர்சனத்துக்கு பயந்து தான் இந்த முடிவு என்கிறார்கள் ரசிகர்கள்.