குஷி படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதால் மகிழ்ச்சியில் திளைத்துள்ள நடிகை சமந்தா

சென்னை: குஷி படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்த பிறகு தான் தனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டதால் சினிமாவில் அதிகம் கவனம் செலுத்த முடித்த நிலையில் இருந்தார். அந்த நிலையிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை எல்லாம் நடித்து முடித்தார் அவர். அப்படி ஒரு படம் தான் குஷி.

விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் அந்த படத்தில் நடித்து இருக்கிறார். ரிலீஸ் ஆன படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

முதல் நாளில் மட்டும் 30.1 கோடி ருபாய் வசூல் வந்திருக்கிறது என தயாரிப்பாளர் தற்போது அறிவித்து இருக்கிறார். குஷி படத்திற்கு என்ன ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என சமந்தா அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தாராம். Stress உடன் இருந்த போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவதை பார்த்த பிறகு தான் தனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாகவும் கூறி இருக்கிறார். என்னை luckiest girl alive போல உணர வைக்கிறீர்கள் என ரசிகர்களுக்கு நன்றி கூறி இருக்கிறார் அவர்.