சென்னை விமான நிலையத்தில் செம ஸ்டைலிஷாக வந்த அஜித்

சென்னை: துணிவு படம் முடிவடைந்த நிலையில் புல் ஷேவ் செய்து செமையாக இருக்கும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இரு தினங்களுக்கு முன் முடிவடைந்தது. படப்பிடிப்பு முடிவடைந்த கையுடன் தாடி மீசை ஷேவ் செய்து ஹாலிவுட் ஹீரோ போல் மாறிவிட்டார்.

இந்நிலையில் வெளியூரில் படப்பிடிப்பை முடித்து நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.