அஜித்தின் துணிவு படத்தில் அதிக வைலன்ஸ் இருப்பதால் சவுதியில் தடை?

சென்னை: அஜித்தின் துணிவு படத்தில் அதிக வைலன்ஸ் இருப்பதாக தெரிவித்து இப்படத்திற்கு சவுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக தொடர்ந்து கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பவத்தின் உண்மை கதை என்று எப்போதோ கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் டிரைலரும் கதை பற்றி க்ளூ கொடுத்துள்ளது, யூடியூபில் வீடியோ தாறுமாறு சாதனையும் செய்து வருகிறது. வரும் பொங்கல் ஜனவரி 11ம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் அதிக மோசமான வார்த்தைகள் இருக்கிறது என்று சென்சார் குழு நிறைய இடத்தை கட் செய்துள்ளார்களாம். இதற்கு இடையில் படத்தின் நிறைய Violence இருக்கிறது என்று சவுதியில் படத்தை Ban செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.