அக்சய்குமாரின் படம் வசூலில் பின்னடைவு... படக்குழுவினர் அதிர்ச்சி

மும்பை: பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட அக்சய் குமாரின் படம் 3 நாட்களில் ரூ.10 கோடியை மட்டுமே வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அக்ஷய் குமார் நடித்த செல்பி திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியான நிலையில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இந்த படம் வெறும் பத்து கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளதை அடுத்து இந்த படம் தோல்வி என கூறப்பட்டு வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்களின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. ஷாருக்கானின் ‘பதான்’ மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் செல்பி. இந்த படம் மலையாளத்தில் வெளியான டிரைவிங் லைசன்ஸ் என்ற திரைப்படத்தின் ரீமேக் என்பதால் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று கூறப்பட்டது.

ஆனால் முதல் மூன்று நாட்களில் இந்த படம் வெறும் 10.30 கோடி மட்டுமே வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.