சஞ்சீவிற்கு விலையுயர்ந்த சூட்கேசை பரிசளித்த ஆலியா

சென்னை: சஞ்சீவிற்கு விலையுயர்ந்த பொருளை பரிசளித்துள்ளார் ஆலியா மானசா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராஜா ராணி என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஐலா, ஐர்ஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பின்னரும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

குழந்தை பிறந்த போது கொஞ்சம் கேப் விட்டிருந்த ஆலியா தற்போது மீண்டும்புதிய சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட துபாய்க்கு சென்றிருக்கும் சஞ்சீவுக்கு ஆலியா balmain paris சூட்கேஸ் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.


இதன் விலை ரூ.1,36,537. அவ்வளவு விலையுயர்ந்த பரிசா என இணையவாசிகள் வாய்ப்பிளந்துவிட்டனர். இந்த தகவல் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.