ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு இன்று 15ம் தேதி முதல் தொடங்கப்பட்டு அடுத்த 25 நாட்களில் முடிக்கப்படும் என இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தின் அடுத்தபடம் அண்ணாத்த. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை 40 சதவீதம் காட்சிகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.
தற்போது அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ள நிலையிலும், ஜனவரியில் கட்சி பெயரை அறிவிக்க இருப்பதாலும் அதற்கு முன்பாக படப்பிடிப்பை முடிக்கும் வேலையில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
ரஜினியும் ஒரே மாதத்தில் தனது காட்சிகள் அனைத்தையும் படமாக்கி விடுமாறு கூறியுள்ளார்.
இன்று
15ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அடுத்த 25 நாட்களில்
முடிக்கப்படும் என இயக்குனர் சிவா தெரிவித்துள்ளார். இந்நிலையில் அண்ணாத்த
குறித்து நடிகர் ரஜினிகாந்த்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி
அண்ணாத்த படப்பிடிப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் எனத்
தெரிவித்திருக்கிறார்.