ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசனுக்கு சாட்டையடி பதில்!

சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு சாட்டையடி பதில் கொடுத்த நடிகை ஒருவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

’எதுவும் நடக்கும்’ என்ற தமிழ் படத்திலும் பல மலையாளப் படத்திலும் நடித்தவர் நடிகை அபர்ணா நாயர். இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து உரையாடி தனது கருத்துக்களை பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது முகநூலில் ரசிகர்களிடம் உரையாடியபோது, வக்கிர எண்ணம் கொண்ட ரசிகர் ஒருவர் இவருடைய முகநூல் பக்கத்தில் ஆபாசமான ஒரு கேள்வியை கேட்டுள்ளார். இதனை அடுத்து கடுப்பாகிய அவர் கூறியதாவது:-

என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம். இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை.

ஆபாசமான வக்கிர எண்ணம் கொண்ட ரசிகருக்கு சாட்டையடி பதில் கூறிய அபர்ணா நாயருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.