பிறந்த நாளில் அனைவரையும் அழ வைத்த அறந்தாங்கி நிஷா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு நாட்கள் கலகலப்பான சென்றதற்கு அறந்தாங்கி நிஷாவே முழு காரணம். பிக்பாஸ் முதற்கொண்டு யாரையும் விடாமல் அவர்கள் கலாய்த்த விதம் அனைவரையும் ரசிக்கும் வகையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஒருசில சண்டைகள் மற்றும் மொக்கையான டாஸ்குகள் காரணமாக அறந்தாங்கி நிஷா ஓரம் கட்டப் பட்டதாக தெரிகிறது. கடந்த 4 நாட்களாக அறந்தாங்கி நிஷா இருந்த இடமே தெரியாமல் உள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் தனது திருமண நாளை கொண்டாடிய அறந்தாங்கி நிஷா, இன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். சக போட்டியாளர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டினார்கள். இந்த நிலையில்தான் இந்த பிறந்த நாளின் போது தனது அம்மாவை மிஸ் செய்ததாக அழுது கொண்டே அறந்தாங்கி நிஷா கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள டிவியில் அவருடைய அம்மாவும் மகளும் தோன்றியதை அடுத்து டிவி அருகே சென்று தனது அம்மாவிற்கு முத்தம் கொடுத்தார் அறந்தாங்கி நிஷா. அப்போது அவர் தேம்பித் தேம்பி அழுதது மட்டும் இல்லாமல் சக போட்டியாளர்களையும் அழ வைத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

அனைவரையும் கலகலப்பாக கொண்டு சென்ற அறந்தாங்கி நிஷா இன்று அனைவரையும் அழ வைத்தது நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.