பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் மகளுடன் புகைப்படம் எடுத்த அர்ச்சனா

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தன் மகளுடன் அர்ச்சனா எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் நடிகை ஆரம்ப வாரங்களில் ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ் மற்றும் அறந்தாங்கி நிஷா எலிமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, அர்ச்சனா 'பிக் பாஸ்' வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த பிறகு அவரது மகள் சாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மை பாஸி குமாரு இஸ் பேக். கடவுள் இருக்கான் குமாரு என்று பதிவிட்டு அம்மாவுடன் எடுத்துக்கொண்ட ஸ்டில்லையும் ஷேர் செய்துள்ளார்.

இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் வெகு வேகமாக வைரலாகி வருகிறது.