தற்கொலை குறித்து இந்த வயதில் நானும் யோசித்து இருக்கிறேன் .. நடிகர் கமல்

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்று வரும் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், “மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் ஜனநாயகம் வாழும். உங்களுக்கெல்லாம் வாக்களிக்கும் வயது வந்துவிட்டது. எனவே கையில் மை வைக்கப்படுவதற்கு முன் யாரைத் தேர்தெடுக்கிறோம் என்ற விழிப்புணர்வு வேண்டும்.இந்தி ஒழிக அல்ல... தமிழ் வாழவேண்டும் என்றே கூறுகிறேன்.

மேலும் நீங்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் அரசியல் உங்கள் வாழ்க்கையில் வந்து விடும். மாணவர்கள் அரசியலுக்கு வந்துவிட்டால் வேறு வழியின்றி ஜனநாயகத்தை வாழட்டும் என விட்டு விட்டு விலகிவிடுவார்கள்.


குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை நான் தந்த யோசனை. எனது யோசனையை தமிழக அரசு எடுத்துக் கொண்டாலும் பொறாமைப்படாமல் நான் பாராட்டுகிறேன். தற்கொலை குறித்து நானும் யோசித்து இருக்கிறேன். தற்கொலை பற்றி 20, 21 வயது இருக்கும் போது நானும் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் என்னை கண்டுகொள்ளவில்லையே என்ற ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்,

இதையடுத்து ஒருபோதும் அவசரப்பட கூடாது. வாழ்க்கையின் ஒரு அங்கம் மரணம். அது வரும்போது வரட்டும், நீங்களாக தேடாதீர்கள். 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதில் எத்தனை சதவீதம் நிஜம்? ஏனென்றால் பெண்கள் பதவி பெற்றாலும் ஆண்கள் தான் ஆதிக்கம், அதிகாரம் செலுத்துகிறார்கள் அது பெண் சுதந்திரம் ஆகாது,முழுமையானது ஆகாது. முழுமையாக கொடுத்து விட்டால் 50 சதவீதம் 5 வருடத்தில் வரும்” என அவர் கூறினார்.