செம நஷ்டமாம் நடிகர் சூர்யாவுக்கு; வணங்கான் படம் ட்ராப் ஆனதால்!!!

சென்னை: சூர்யா மற்றும் பாலா ஆகியோர் பல வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேர்ந்த படம் தான் வணங்கான். இந்த படம் அறிவிக்கப்பட்டு முதல் ஷெட்யூல் ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் பாலா மற்றும் சூர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

சூர்யாவும் தனது அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இந்நிலையில் 'சூர்யாவுக்கு இந்த கதை செட்டாகாது. அதனால் அந்த படத்தில் இருந்து விலகுகிறார் என பாலா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.


வணங்கான் படத்தை சூர்யா தான் தயாரித்து நடித்து இருந்தார். இதுவரை அந்த படத்திற்காக சூர்யா 10 கோடி ருபாய் வரை செலவு செய்திருக்கிறாராம்.

படம் ட்ராப் ஆனதால் தற்போது மொத்த பணமும் அவருக்கு நஷ்டமா ஏற்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.