மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் உடல் தகனம்

மறைந்த நடிகை சித்ராவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

நடிகை சித்ரா நசரத்பேட்டை அருகே உள்ள தனியார் விடுதியில் நேற்று தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ஹோட்டல் அறையில் சித்ரா உடன் திருமணம் நிச்சயப்பட்ட ஹேமந்த் உடன் தங்கியிருந்தார்.

சித்ராவின் மரணம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று நடைபெற்றது.

சித்ராவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. சித்ராவின் உடலுக்கு நடிகர், நடிகைகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மாயனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இதனிடையே சித்ராவின் பிரேத பரிசோதனையில் அவரது மரணம் தற்கொலை தான் என்று உறுதியாகி உள்ளது. அவரது கன்னத்தில் இருந்த நகக்கீரல் சித்ராவின் நகக்கீறல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார், என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். அவருடன் ஹோட்டல் அறையில் இருந்த ஹேமந்த், சித்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.