தொடர் தோல்விகளால் வேதனையில் ஆழ்ந்துள்ள பாலிவுட் பிரபல நடிகர்

மும்பை: தொடர்ந்து தான் நடிக்கும் படங்கள் தோல்வி அடைந்து வருவதால் பாலிவுட் முன்னணி ஹீரோ அக்சய்குமார் வேதனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார். அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று 100 கோடி வசூலைக் கடக்கும்.

ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வருகிறது. இது அக்ஷய்குமாருக்கும், அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.அக்ஷய்குமார் நடித்து கடைசியாக வெளிவந்த ஆறு படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன.

அந்தத் தோல்வியை ஆரம்பித்து வைத்த படம் 'லட்சுமி'. தமிழில் வெளிவந்த 'காஞ்சனா' படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.
இதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'பெல்பாட்டம், சூர்யவன்ஷி, அன்த்ராங்கி ரே (ஓடிடி), பச்சன் பாண்டே' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின.

அந்த வரிசையில் சமீபத்தில் வெளிவந்த 'சாம்ராட் பிருத்விராஜ்' படமும் இடம் பிடித்துள்ளது. ஓடிடியில் வெளியான படம் தவிர மற்ற படங்கள் வியாபார ரீதியில் வசூலைத் தராமல் தோல்வியைத் தழுவிய படங்கள். இருப்பினும் அக்ஷய்குமார் தொடர்ந்து சில படங்களைத் தன் கைவசம் வைத்திருக்கிறார்.

தென்னிந்தியாவில் இருந்து ஹிந்திக்குச் சென்று வசூலைக் குவித்த 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் பாலிவுட் ரசிகர்களின் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டதாக பாலிவுட்வாசிகள் தெரிவிக்கின்றனர்.