அனுமதியின்றி கிளிகள் வளர்ப்பு... ரோபா ஷங்கர் வீட்டிலிருந்து வனத்துறையினர் பறிமுதல்

சென்னை: கிளிகள் பறிமுதல்... நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக ரோபோ ஷங்கர் நடித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதால் அவர் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார் .

இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்க்கப்பட்டு வந்த 2 அலெக்ஸாண்ட்ரியன் பச்சைக் கிளிகளை கிண்டி வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 2 கிளிகளும் கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன.