பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் இயற்கை எய்தினார்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன். அவருக்கு வயது 69. இவர் பாரதிராஜாவின் 40 படங்களுக்கு இவர் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இருப்பினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று மதியம் அவர் இயற்கை எய்தினார்.

கண்ணனின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜுன் 14) பெசன்ட் நகர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடக்கிறது. கண்ணனின் மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.