பாம்பை துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது புகார்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கிவரும் 'ஈஸ்வரன்' என்ற திரைப்படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த பாம்பு ஒன்றை பிடித்து அருகிலுள்ள சாக்குமூட்டையில் போடுவது போல ஒரு வீடியோ வைரல் ஆனது. இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து தற்போது இதுகுறித்து விலங்குகள் நல வாரியத்தில் சிம்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

'ஈஸ்வரன்' படப்பிடிப்பு தளத்தில் பாம்பை துன்புறுத்தியதாக நடிகர் சிம்பு மீது ஷர்வன் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வனத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து வனத்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த புகாரால் படக்குழுவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.