சர்ச்சையை ஏற்படுத்தியே அதிக சம்பாதித்த நடிகை

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்தியே அதிக சம்பாதித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்களை பற்றி பேசி மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ஸ்ரீ ரெட்டி. பல படங்களில் நடித்தாலும் தனக்குக் கிடைக்காத பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனப் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

நடிகரும் நடன இயக்குனருமான லாரன்ஸ் மக்களுக்கு நிறைய உதவி செய்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அறக்கட்டளை மூலம் பல குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். மேலும் சமீபத்தில் லாரன்ஸ் தனது அறக்கட்டளைக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம். இப்போது பல படங்களில் கமிட்டாகி உள்ளேன், இந்த பணத்தை வைத்து பார்த்துக் கொள்கிறேன், உங்கள் ஆசிர்வாதம் மட்டும் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற லாரன்ஸை தெருவில் விட்டு அசிங்கப்படுத்தினார் ஸ்ரீ ரெட்டி. அதாவது, லாரன்ஸ் வாய்ப்பு கேட்டு அலுவலகம் செல்லும் போது, சினிமாவில் ஏழ்மையான பின்னணியில் இருந்து வந்ததால், புதிய வாய்ப்புகளைத் தேடி வருபவர்களுக்கு உதவுவதாகச் சொல்கிறார் லாரன்ஸ். ஆனால் இதுவரை எனக்கு எதுவும் செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் லேட் நைட் பார்ட்டியில் குடிபோதையில் இருந்த என்னை கெடுத்தார் என்று ஸ்ரீ ரெட்டி கூறியிருந்தார். இதனால் பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் பெயரை சொல்லி ஸ்ரீ ரெட்டி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த பட்டியலில் ஸ்ரீகாந்த், விஷால், நானி என பல நடிகர்களின் பெயர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

சினிமாவில் வாய்ப்புக்காக இப்படி சொன்னது மட்டுமின்றி, இப்படி பேசி மீடியாக்களுக்கு பேட்டியளித்ததால் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இந்த பகடைக்காயை வைத்து நிறைய பணம் சம்பாதித்துள்ளார் என்று விபரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.