குரல் வளம் இல்லாததால் படங்கள் நடிப்பதை தவிர்த்து விட்ட கவுண்டமணி

குரல் வளம் முன்பு போல் இல்லாததால் படங்களில் நடிப்பதை நடிகர் கவுண்டமணி தவிர்த்து விட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் உள்ள காமெடி ஜாம்பவான்களின் முக்கியமானவர் கவுண்டமணி. இன்றும் இவரது காமெடி காட்சிகளை பார்த்து தான் நிறைய பேர் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவரது காமெடி காட்சிகளை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு வருவார்கள்.

சுமாரான நடிகர்களுடன் இவர் நடித்தால் அந்த படம் ஹிட்டாகி விடும் என்பது அப்போதைய சினிமா ரசிகர்களின் கருத்து. அதற்கு காரணம் இவருடைய காமெடி காட்சிகள் தான். முழுக்க முழுக்க நக்கல் நையாண்டி கலந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்துவிடுவார்.

அப்படிப்பட்ட கவுண்டமணி சமீபகாலமாக சுத்தமாக சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். இடையில் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இந்நிலையில் தொடர்ந்து படங்கள் கிடைத்தாலும் நடிக்காமல் உள்ளாராம்.

அதற்கு காரணம் கவுண்டமணிக்கு தற்போது 80 வயதுக்கு மேல் ஆவதால் அவருடைய குரல் வளத்தில் சிறிது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாம். மேலும் முகமும் முன்பு மாதிரி பெரிய அளவு வசீகரம் இல்லாததால் அவரே சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டாராம்.