தனலட்சுமியை வெளியேற்றியது சரி? தவறு; ரசிகர்கள் கருத்து

சென்னை: தனலட்சுமி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும்தான் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது 78 வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து 11 போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வார நாமினேஷனில் கதிரவன், ரட்சிதா, மைனா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் யாரோ ஒருவர் எலிமினேஷன் செய்யப்படுவார்கள் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் நன்றாக விளையாடி வந்த தனலட்சுமி எலிமினேஷன் செய்யப்பட்டது ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் அவருக்கு ஆதரவாக ‘சேவ் தனா’ என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. இந்நிலையில், ரசிகர்கள் பிக்பாஸ் நேர்மையற்ற முறையில் நடந்ததாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் தனலட்சுமியின் பல நேர்மையற்ற செயல்களை கமலே வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது சரியான முடிவுதான்.

எதற்கெடுத்தாலும் கோபப்படும் குணமும், தான் செய்யும் தவறுகளை சொல்லிவிட்டால் அழுது அதை மறைக்க பார்க்கும் குணம் போன்ற பல்வேறு செயல்கள் பிக்பாஸ் ரசிகர்களை கடுப்பேற்றி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிலரை தவிர மற்ற ரசிகர்கள் தனத்தை வெளியேற்றியது சரியான செயல்தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.