பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷயகுமார் மூன்று பேருக்காக மொத்த விமானத்தை புக் செய்தாரா?

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷயகுமாரின் சகோதரியும் அவளுடைய இரண்டு மகள்களும் மும்பையில் இருந்து டெல்லி செல்ல இருந்ததாகவும் அதற்காக அக்ஷய்குமார் மூன்று பேர்கள் பயணம் செய்வதற்காக விமானத்தில் உள்ள மொத்த டிக்கெட்டையும் புக் செய்ததாகவும், கொரோனா வைரஸ் பாதுகாப்பு காரணமாக அவர் இவ்வாறு செய்ததாகவும் ஒருசில ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்தியாக வெளிவந்தது

இந்த நிலையில் நடிகர் அக்ஷய்குமார் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

தனது சகோதரி கடந்த இரண்டு மாதங்களாக மும்பையில் தான் இருக்கின்றார் என்றும் அவர் டெல்லி உள்பட வேறு எங்கும் செல்லவில்லை என்றும் மேலும் அவருக்கு ஒரே ஒரு குழந்தை மட்டுமே இருப்பதாகவும் தனது சகோதரியும் 2 மகள்களும் டெல்லி செல்வதற்காக மொத்த விமான டிக்கெட்டையும் புக் செய்தததாக வெளிவந்த தகவலில் உண்மை இல்லை என்றும் இது முழுக்க முழுக்க வதந்தி என்றும், மேலும் இதுபோன்ற வதந்தியை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தான் முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.