இயக்குனர் வம்சிபைடி பள்ளிக்கு உடல்நிலை பாதிப்பு; வாரிசு படப்பிடிப்பு நிறுத்தம்

சென்னை: தொடர்ச்சியாக இரவு, பகலாக படவேலைகளில் ஈடுபட்டிருந்ததால், வம்சி பைடிபள்ளிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் வாரிசு. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, ஜெயசுதா, ஷாம், சங்கீதா, யோகிபாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'வாரிசு' திரைப்படத்தை தில்ராஜுதயாரித்து வருகின்றார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இதுவரை இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தமன் இசையில் முதல்பாடலை தீபாவளிக்கு வெளியிட உள்ளனர். சென்னை, ஐதராபாத், விசாகப்பட்டினம், புனே பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.


தொடர்ச்சியாக இரவு, பகலாக படவேலைகளில் ஈடுபட்டிருந்ததால், வம்சி பைடிபள்ளிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் ஒருவாரம் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் வற்புறுத்தியுள்ளதாக திரைப்பட குழுவினர் தெரிவித்துள்ளனர். அவரது ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு மும்முரமாக தொடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.