இப்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு வேண்டாம்; நடிகர் விவேக் வேண்டுகோள்

இப்போதைக்கு வேண்டாம்... ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துங்கள் என்று தமிழக அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சத்தால் நிறுத்திவைக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1ம் தேதி தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தக் கூடாது என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல. அவர்களின் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு செய்து பரிசீலிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.