பணம் வேண்டாம்... வாய்ப்பு கொடுங்க: நடிகர் பெஞ்சமின் கதறல்

வாய்ப்பு கொடுங்க போதும். பணம் வேண்டாம்...என் உயிரை காப்பாற்ற பணம் கொடுக்காதீர்கள் வாய்ப்பு கொடுங்க என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார் நடிகர் பெஞ்சமின்.

தமிழ் சினிமாவில் வெற்றி கொடி கட்டு, விஜய்யுடன் திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் காமெடி நடிகர் பெஞ்சமின். இவருக்கு சமீபத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் சிகிச்சைக்காக தன்னிடம் பணம் இல்லை என்ற காரணத்தினால் பெஞ்சமின் சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் தனக்கு ரசிகர்கள் யாரும் பணம் கொடுத்து உதவ வேண்டாம். என்னுடன் நடித்த நடிகர்கள் வாய்ப்பு கொடுத்தால் போதும். அதை வைத்து என்னையும், என் குடும்பத்தையும் கவனித்துக் கொள்வேன் என கண்ணீர் ததும்ப பேசியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாய்ப்பு கொடுங்கள் என கூறி வருகின்றனர். தளபதி விஜய் போன்ற பெரிய நடிகர்கள் பெஞ்சமினுக்கு உதவ முன் வரலாம் எனவும் கூறி வருகின்றனர்.