நான் கொடுத்தாலும் சங்கீதா அனுமதியோடுதான் சஞ்சீவ் வாங்குவார்

சென்னை: நான் எது கொடுத்தாலும் சங்கீதாவின் அனுமதியோடு தான் சஞ்சய் வாங்கி கொள்வார். அப்படி கவனமாக தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வருகிறார் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே சில பிரச்சனை இருப்பது தெரிந்த விஷயம்தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் தன்னுடைய பேரன் மற்றும் மருமகள் சங்கீதா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: மருமகள் சங்கீதா தன்னுடைய பிள்ளைகளை பார்த்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருப்பார். அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது, ஹோம் ஒர்க் செய்ய வைப்பது என அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்வார் .

நான் என்னுடைய பேரன் சஞ்சய்க்கு எதாவது கொடுத்தால் கூட, சங்கீதாவின் அனுமதியோடு தான் சஞ்சய் வாங்கி கொள்வார். அப்படி கவனமாக தன்னுடைய பிள்ளைகளை வளர்த்து வருகிறார் என்று கூறியுள்ளார்.