ஹரிஷ் கல்யாண் - பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் டைட்டிலை வெளியிடுகிறார் பிரபல தெலுங்கு நடிகர்!

ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் நேற்று திடீரென சமூக வலைதளங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.

ஹரிஷ் கல்யாண் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட இந்த புகைப்படத்தில் கமெண்ட்டுகள் தடைசெய்யப்பட்டு இருந்தது. அதே போல் பிரியாபவானி சங்கரும் அதே புகைப்படத்தை பதிவு செய்து கமெண்ட்டுகளை தடை செய்திருந்தார்.

இந்த புகைப்படம் காரணமாக இருவரும் காதலிக்கிறார்களா? என்ற வதந்தி ஒரு பக்கம் பரவி வந்தாலும் இருவரும் இணைந்து நடித்து வரும் (பெல்லி சூபுலு) 'Pelli Choopulu' என்ற தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் படத்திற்கான விளம்பரமாக தான் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நாளை மாலை 5.40 மணிக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட இருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண் - ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.