நடிகை சரண்யா விவகாரத்து பெற்றவர் என்ற தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை சரண்யா விவாகரத்து ஆனவர் என்று செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன்பின் மளமளவென பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் நடிகர் பொண்வண்ணனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தற்போது தமிழ் சினிமாவில் அம்மா வேடங்களில் கலக்கி வருகிறார். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், பொண்வண்ணனுக்கு முன்பு அவர் நடிகர் ராஜசேகரை திருமணம் செய்தது தற்போது தெரியவந்துள்ளது. நிழல்கள் படத்தில் நடித்தவர் ராஜசேகர். அதன்பின் பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ளார். 1987ம் வருடம் இவரை சரண்யா திருமணம் செய்துள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் 1988ம் வருடம் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

அதன்பின்னர் 1995ம் வருடம் பொன்வண்ணனை சரண்யா திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.