கவுதம் - மஞ்சிமா திருமணம்... திரை பிரபலங்கள் வாழ்த்து

சென்னை: கவுதம் -மஞ்சிமா மோகன் திருமணம் முடிந்துள்ளது. அவர்களுக்கு திரைத்துறையினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அச்சம் என்பது மடமையடா, துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர். உள்ளிட்ட படங்களில் மஞ்சிமா நடித்துள்ளார். நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலிப்பதாக தகவல் வெளியானது. பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இவன் தந்திரன், ரங்கூன், மிஸ்டர் சந்திரமௌலி போன்ற படங்களில் நடித்த கௌதம் தற்போது முருகதாஸ் தயாரிப்பில் ‘ஆகஸ்ட் 16,1947’ படத்தில் நடித்து வருகிறார். சிம்புவின் ‘பாத்து தலை’ படத்திலும் கவுதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் காதலை உறுதி செய்தனர். இதற்கிடையில் இருவரும் நவம்பர் 28ம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக செய்தி பரவியது. இதையடுத்து கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நாங்கள் இருவரும் நவம்பர் 28ம் தேதி திருமணம் செய்து கொள்வதாக கவுதம் கார்த்திக் உறுதி செய்தார். குடும்பத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் இந்த திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்கு உங்களின் அன்பும் ஆசியும் தேவை என்றார்.

இந்நிலையில் கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் திருமணம் இன்று சென்னையில் நடந்தது. திருமண விழாவில் கவுதம் வாசுதேவ் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.