விவசாயம் செய்ய போய்விட்டாரா மணிமேகலை... பதிவை பார்த்து ரசிகர்கள் கேள்வி

சென்னை: விவசாயம் செய்ய போய்விட்டாரா என்று ரசிகர்கள் கேட்க தொடங்கி உள்ளனர் மணிமேகலையின் ஒரு பதிவை பார்த்து.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தூணாக இருந்த மணிமேகலை திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அதற்க்கு காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை.அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்று கூறிவருகின்றனர். ஆனால், அது வெறும் வதந்தி தான் என்று கூறப்படுகிறது.

மற்றொரு புறம் மணிமேகலைக்கும் விஜய் டிவி குழுவிற்கும் ஏற்பட்ட பிரச்சனை தான் மணிமேகலை வெளியேற காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இந்நிலையில், மணிமேகலை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விவசாயம் செய்யும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை விவசாயம் செய்ய துவங்கிவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.