ரோஜா படத்தின் வாய்ப்பை இழந்து அழுதேன்; நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா ஓப்பன் டாக்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் என்றும் அனைவரின் விருப்பத்துக்கு உரிய படம் என்றால் மிகையில்லை. இந்த படத்தில் மதுபாலாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து இழுத்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்து அழுததாக நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சுவாமி மற்றும் மதுபாலா ஆகியோர் நடிப்பில் ரோஜா திரைப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தில் நடித்த மதுபாலா மிகப்பிரபலமான நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகவில்லையாம். அந்த படத்தில் மணிரத்னத்தின் முதல் தேர்வாக இருந்தது நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாதானாம்.

இதுபற்றி அவர் ஒரு நேர்காணலில் 'நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. அப்போது நான் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். அதனால் இந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். 'எப்படி ஒருவர் தேனைக் கொடுக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்வோமோ? அதுபோல'தான். இதை நினைத்து நான் பலமுறை அழுதுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தள்ளார்.