அப்படி நான் சொல்லவே இல்லை... மறுப்பு தெரிவித்த நடிகை சமந்தா

ஐதராபாத்: தான் கூறியதாக பரவி வரும் தகவல் உண்மையில்லை என்று நடிகை சமந்தா மறுப்பு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சமந்தாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றார்.
அதிலிருந்து பிசியாக நடித்து வரும் நடிகர் நாக சைதன்யா மீது காதல் வதந்திகள் பரவி வருகின்றன. மேலும் அவர் ஒரு நடிகையுடன் டேட்டிங் செய்வதாகவும் செய்திகள் வெளியாகின.

சமந்தாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, நடிகர் நாகசைதன்யா, நடிகை ஷோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. மணிரத்னம் இயக்கிய பொன்னின் செல்வன் படத்தில் வானதியாக நடிகை ஷோபிதா நடித்திருந்தார்.

நடிகை ஷோபிதா தற்போது நடிகர் நாக சைதன்யாவை காதலிப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. நடிகை சோபிதா துலிபாலாவுடன் நாகசைதன்யா லண்டன் சுற்றுலா சென்றுள்ளார், அங்கு இருவரும் டேட்டிங் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து நாக சைதன்யா எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது. குணசேகரன் சரித்திரப் படத்தை இயக்கியுள்ளார். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார்.

விவாகரத்துக்குப் பிறகு நாக சைதன்யா நடிகையுடன் டேட்டிங் செய்வது குறித்து நடிகை சமந்தாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு சமந்தா கூறியதாவது: “எவன் எவகூட டேட்டிங் செய்தால் எனக்கென்ன, நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது” என காட்டமாக பதிலளித்ததாக செய்தி வெளியானது. ஆனால் தற்போது, சமந்தா ஒரு டுவீட்டில், அதுபோன்ற எந்த கருத்தையும் தான் கூறவில்லை என மறுத்துள்ளார்.