இன் கார் படம் எனக்கு பெரும் சவாலை அளித்தது... ரித்திகா சிங் பெருமிதம்

சென்னை: இன் கார் படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது. எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ஹர்ஷ் வர்தனுக்கு நன்றி என்று நடிகை ரித்திகா சிங் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”, கடத்தப்பட்டு வன்புணர்வுக்குள்ளாகும் பெண்ணின் வலியை, அவளது பார்வையில் அந்த கடத்தல் சம்பவத்தின் வழியாகவே சொல்லும் படமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை இன்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. இப்படத்தை தமிழில் ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா வழங்குகிறார்.

மார்ச் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் திரையுலகினர், படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் நடிகை ரித்திகா சிங் பேசியதாவது, இன் கார் படம் எனக்கு மிகப்பெரும் சவாலானதாக இருந்தது.

எனக்குள் பெரும் பாதிப்பை “இன் கார்” படம் ஏற்படுத்தியது. இப்படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனர் ஹர்ஷ் வர்தனுக்கு நன்றி. இந்தப்படத்தை அனைவரிடமும் கொண்டு சேருங்கள் என்றார்.