கேப்டன் மில்லர் படம் குறித்து வெளியான தகவல்

நடிகர் தனுஷ் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக உள்ளார். சமீபத்தில் வெளியான அவரது திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கிய அவரது அடுத்த படம் வாத்தி பிப்ரவரி 17 அன்று வெளியாகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ஆக்‌ஷன் படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படம் இந்த ஆண்டு கோடையில் பான் இந்தியா படமாக வெளியாகும். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மற்றும் கேரள வனப்பகுதிகளில் நிறைவடைந்து.

தற்போது குற்றாலத்தில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக இணையத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.