மகள் இயக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாரா நடிகர் ரஜினி?

சென்னை; சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா?... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிகர் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ பாதிக்கும் மேல் முடிவடைந்துள்ளது. தீபாவளி பிரேக்கிற்குப் பிறகு மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கி நவம்பர் இறுதியில் முடிவடையும் எனக் கூறப்படுகிறது.


இதையடுத்து ரஜினியின் 170-வது படத்தை 'டான்' பட புகழ் சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாகவும், 'தலைவர் 171' படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூன்றாவது படத்தை இயக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க அதர்வா உள்ளிட்ட சில இளம் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

இதற்கிடையே கதையை ரஜினியிடம் விவரித்த ஐஸ்வர்யா, அவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க கோரிக்கை வைத்துள்ளாரம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.