பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ரித்திகா

சென்னை: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து முக்கிய நடிகை வெளியேறி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் டாப் 3 சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கடந்த சில வாரங்களுக்கு முன் நம்பர் 1 இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, முதலிடத்தை பிடித்ததன் காரணமாக இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியலில் எழில் மனைவி அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரித்திகா. இவர் இதற்குமுன் ராஜா ராணி சீரியலிலும் நடித்துள்ளார். மேலும் இவருக்கு கடந்த ஆண்டு விணு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் முதன்மை ரோலில் நடித்து வந்த ரித்திகா தற்போது இந்த சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். இனி அவருக்கு பதிலாக பிரபல சின்னத்திரை நடிகை அக்ஷிதா அசோக் தான் அமிர்தா ரோலில் நடிக்கவுள்ளார். நடிகை அக்ஷிதா அசோக் தற்போது காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய ரோலில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.