அரசியலுக்கு வரும் முடிவா? நாகார்ஜூனா கொடுத்த விளக்கம்

ஆந்திரா : தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனா, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் குடும்பத்துக்கு நெருக்கமானவர். தற்போது அவர் அரசு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார் .

மேலும் கமர்சியல் படங்களிலும் நடித்து வருகிறார். இதையடுத்து, நாகார்ஜுனா அரசியலுக்கு வர முடிவு செய்துள்ளதாகவும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் பல தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கு நாகார்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறும்போது விஜயவாடா தொகுதியில் நான் அரசியலில் குதித்து எம்பி பதவிக்கு போட்டியிடப் போவதாக செய்திகள் வந்தன.அதில் உண்மையில்லை.தற்போதைக்கு அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன்.எந்த தேர்தலிலும் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என்றார்.

எனக்கு ஒரு நல்ல கதை கிடைத்தால் போதும் ,அரசியல் தலைவர் வேடத்தில் நடிப்பதை தவிர அரசியலில் ஆர்வம் இல்லை .ஒவ்வொரு தேர்தல் நெருங்கும் போதும் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பிரச்சாரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.இப்போதும் அது. அப்படியே நடந்து கொண்டிருக்கிறது” என்றார்.நாகார்ஜுனா தற்போது தெலுங்கில் கோஸ்டு படத்தில் நடித்து வருகிறேன் என்றும் தகவல் தெரிவித்தார்.