சமரன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல்

சென்னை: ‘சமரன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் சரத்குமார் மற்றும் விதார்த் ஆகியோர் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து பல படங்களில் தங்கள் நடிப்பு திறமை மற்றும் பன்முகத்தன்மையை நிரூபித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தற்போது அறிமுக இயக்குனர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் ‘சமரன்’ படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். மலையாள நடிகர் ஆர்.நந்தா, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ஜார்ஜ், மலையாள நடிகர் சித்திக், கும்கி அஸ்வின் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்றும் கூறினார்.

M360 (M360°) ஸ்டுடியோவின் கீழ் ரோஷ் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு வேத் சங்கர் சுகவனம் இசையமைக்க, குமார் ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு இராணுவ அதிகாரி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரியைச் சுற்றி சுழலும் ஒரு அதிரடி-சஸ்பென்ஸ் கதையே ‘சமரன்’ திரைப்படம்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் மணலி, காட்டுப்பாக்கம், மீனம்பாக்கம், வளசரவாக்கம், கிண்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ‘சமரன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.