சென்னையில் நாளை முதல் லியோ படப்பிடிப்பு தொடக்கம் என தகவல்

சென்னை: நாளை முதல் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் லியோ படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்துள்ள லியோ படத்தின் விளம்பர வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடிக்கின்றனர்.

படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழுவினர் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீர் சென்றுள்ளனர். இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக திட்டமிட்ட காட்சிகளை முடிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் படக்குழுவினர் அங்கேயே தங்கி தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் விஜய், கௌதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்துள்ளனர்.

இந்நிலையில் படக்குழுவினர் காஷ்மீரில் இருந்து சமீபத்தில் சென்னை திரும்பினர். சில நாட்கள் ஓய்விற்கு பிறகு நாளை முதல் சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் லியோ படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது.