பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என தகவல்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் டீசர் நாளை வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் டீசருக்காக தான், திரையுலகமே காத்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர், நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறதாம். இந்த டீசர் வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.