அதெல்லாம் வதந்தி... உண்மையை கூறி விளக்கம் அளித்த நடிகை அபிநயா

சென்னை: படப்பிடிப்பிற்காக விஷாலும், நானும் இருவரும் சேர்ந்து எடுத்த படங்களை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும் நிஜமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இது பொய்யான தகவல் என்று நடிகை அபிநயா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷாலும், நடிகை அபிநயாவும் காதலித்து திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடோடி, பூஜை, குற்றம் 23, ஈசன் போன்ற படங்களில் நடித்தவர் அபிநயா. தற்போது விஷாலுடன் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார். இருவரும் படப்பிடிப்பில் நெருங்கி பழகி, காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. விஷால் ஏற்கனவே சில நடிகைகளுடன் இணைந்துள்ளார்.

பின்னர் அது உண்மையல்ல என்று தெரியவந்தது. அபிநயாவுடனான காதல் உண்மையா? என்று இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இதற்கு அபிநயா விளக்கம் அளித்துள்ளார். மார்க் ஆண்டனி படத்தில் விஷாலின் மனைவியாக நடிக்கிறேன்.

படப்பிடிப்பிற்காக இருவரும் சேர்ந்து எடுத்த படங்களை வைத்து நாங்கள் காதலிப்பதாகவும் நிஜமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவி வருகிறது. இது பொய்யான தகவல் என்று தெரிவித்து காதல் வதந்திகளுக்கு.முற்று புள்ளி வைத்துள்ளார்.