அர்ச்சனாவுக்கு லேசாக ஒரு குட்டு வைத்த கமல்ஹாசன்!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் நுழைந்தவர் அர்ச்சனா. அவர் அனைவரிடமும் கலகலப்பாக பழகி வந்தாலும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் உடனே தானே முன் நின்று அந்த பிரச்சனையை தீர்க்க முயல்வதும் பிக்பாஸ் வீட்டில் நாட்டாமைத்தனம் செய்து வருவதும் பார்வையாளர்களை சற்று அதிருப்தியை உள்ளாக்கியது.

அதுமட்டுமின்றி சுரேஷ் உள்பட ஒரு சிலர் வெளிப்படையாகவே அர்ச்சனா டாமினேட் செய்வதாக குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் கமல் நேற்றைய நிகழ்ச்சியின் போது விருமாண்டி படத்தின் கேரக்டருடன் ஒப்பிட்டு அர்ச்சனாவின் குறையை சுட்டிக்காட்டினார்.

அர்ச்சனா பிக்பாஸ்க்கு வெளியே ஆங்கரிங் செய்து கொண்டிருப்பதால், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பின்னரும் தொடர்ந்து ஆங்கரின் செய்து வருவதாக கமல் தெரிவித்தார். ஆனால் அதனை வேகமாக மறுத்த அர்ச்சனாவிடம், 'அதை நான் தவறு என்று சொல்லவில்லை என்றும் ஆனால் எல்லா விஷயத்திலும் குறிப்பாக ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் அதில் நீங்கள் டாமினேட் செய்வதுபோல் இருக்கிறது' என்றும் அர்ச்சனாவுக்கு லேசாக ஒரு குட்டு வைத்தார்

கமல்ஹாசனின் இந்த பேச்சு அர்ச்சனாவை கொஞ்சம் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது அவரது முகத்தில் இருந்து தெரிகிறது. இனிவரும் நாட்களிலாவது அர்ச்சனா தனது நாட்டாமைத்தனத்தை கைவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.