அர்ச்சனாவின் அன்பு குரூப்புக்கு கமலஹாசனின் கேள்விக்கணைகள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பான கட்டத்திற்கு வந்திருக்கும் நிலையில் இன்று ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் நிலையில் உள்ள கமல்ஹாசன், இந்த பிரச்சனைகளை அனுபவத்தின் மூலம் மிக எளிதாக தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கட்டாயம் கமல்ஹாசனின் சாட்டை சர்ச்சைக்குரியவர் மீது வீசப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சற்று முன்னர் வெளியான புரமோவில் அவர் கூறியபோது, 'நல்லவரா? கெட்டவரா? என்று கூறி பாலாஜி போல் சொடக்கு போட்ட கமலஹாசன், வில்லன் யார்? ஹீரோ யாரு? என்று கூறியுள்ளார்.

இதனை அடுத்து இன்றைய முதல் பிரச்சனையாக பாலாஜி-ஆரி மோதல் குறித்து அவரது விசாரணை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 'தன் விளையாட்டை தானே விளையாடுகிறார்களா? அல்லது அன்பால் எய்யப்பட்ட அம்பாக பாய்கிறார்களா? வினாக்கள் பல, விடைகளை காண்போம்' என்று கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த பிரச்சனை அர்ச்சனாவின் அன்பு குரூப்புக்கு கமலஹாசனின் கேள்விக்கணைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.