கதையை கூட கேட்காமல் சந்திரமுகி 2 ல் நடிக்க ஒப்புக்கொண்டாராம் கங்கனா

சென்னை: கதையைக் கேட்காமலேயே சந்திரமுகியில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் கங்கனா என்று தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘சந்திரமுகி-2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா மற்றும் பல பிரபலங்கள் இதில் நடித்துள்ளனர்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளார். ‘சந்திரமுகி 2’ தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகிறது.

இந்நிலையில், படத்தின் கதையைக் கேட்காமலேயே சந்திரமுகியில் நடிக்க கங்கனா ஒப்புக்கொண்டதாக இயக்குநர் பி.வாசு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இந்தி படத்தின் கதையை சொல்ல சென்றதாகவும், ‘சந்திரமுகி-2’ படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், சந்திரமுகி வேடத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்றும் கங்கனாவிடம் கூறியதாக கூறப்படுகிறது.