புதிய படத்தில் மீண்டும் ஜோடியாகிறது கார்த்தி – ராஷ்மிகா மந்தனா

சென்னை; மீண்டும் இணைகிறது... தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.

அதையடுத்து விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடிப்பதற்கு முயற்சி எடுத்தவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலிவுட்டுக்கு சென்ற ராஷ்மிகா, அடுத்தடுத்து மூன்று படங்களில் புக்காகி அங்கு பிஸியாகிவிட்டார்.

இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா, அடுத்தபடியாக தமிழில் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தின் மூலம் மீண்டும் அவருக்கு ஜோடியாக கமிட்டாகி இருக்கிறார்.


புஷ்பா வில்லன் சுனில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க, ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ட்ரீம் வாரியம் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கும் தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.