கமல்ஹாசனுக்கு கவிதை வடிவில் ஒரு வாழ்த்து தெரிவித்த கவியரசு வைரமுத்து!

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள், கட்சி தொண்டர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று காலை கமலஹாசன் அவர்கள் சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திரையுலகினர் பலர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனுக்கு கவிதை வடிவில் ஒரு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:-

பிறந்தநாள் என்பது
சில மெழுகுவத்திகளை அணைப்பதல்ல;
சில தீபங்களை ஏற்றுவது.

இருளைப் புறங்காண
தீபங்கள் ஏற்றத் தெரிந்தவர்
நண்பர் கமல்ஹாசன்.

தொலைபேசியில்
அழைத்து வாழ்த்தினேன்.

பலருக்கும் அவர் நம்மவர்;
எனக்கு நல்லவர். வாழ்க!